Friday, February 27, 2009

சிந்தனைக்கு - 16

சிந்தனைக்கு - 16
******************

16."முதலில் உங்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள்; பிறகு கடவுளிடத்தில் வையுங்கள். ஆற்றலும் தகுதியும் உள்ள பலசாலிகள் தாங்கள் விரும்பியவாறு உலகத்தை இயங்கச் செய்வர்; உணர்வதற்கு இதயமும், சிந்திப்பதற்கு மூளையும், உழைப்புக்கு வலிமை வாய்ந்த தோள்களும் நமக்குத் தேவை."

- விவேகாநந்தர்

Monday, February 23, 2009

சிந்தனைக்கு - 15

சிந்தனைக்கு - 15
************************

13."முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு னுடிவில் சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்று கூறலாகாது. 'நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு' என்று சொல்லுங்கள்."

- விவேகாநந்தர்

Saturday, February 21, 2009

சிந்தனைக்கு - 14

சிந்தனைக்கு - 14
***********************

14."ஏழை மக்களை அரைத்து, அரைத்துக் கசக்கிப் பிழிந்த செல்வத்தை வைத்துக்கொண்டு, பகட்டாக உடை அணிந்து, உலாவருபவர்கள் பதர்கள். பசியால் வாடும் காட்டுமிராண்டிகளைக் காட்டிலும் மோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடான கோடி ஏழை மக்களுக்கு உதவாது வாழும் இவர்களைப் பதர் என்றுதான் கூறவேண்டும்."

- விவேகாநந்தர்

Friday, February 20, 2009

சிந்தனைக்கு - 13

சிந்தனைக்கு - 13
************************

13."பணத்தையும் அதிகாரத்தையும் சேர்த்துப் பங்கிட்டுக்கொள்ளும் கருத்துடன் இரு சாரார் இணைதல் கூடாது. பலவீனருக்கு உதவவும், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு கிட்டச் செய்யவும், இழந்த பண்டைப் பெருமையை நாடு மீண்டும் பெறவும், அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்."

- விவேகாநந்தர்

Wednesday, February 18, 2009

சிந்தனைக்கு - 12

சிந்தனைக்கு - 12
*****************

12. "சாதாரணமான எனது வாழ்விலே எனக்கு ஏற்பட்ட அனுபவமானது, நல்ல நோக்கம், நேர்மை, அளவற்ற அன்பு இவற்றைக்கொண்டு ஒருவன் உலகத்தையே வெல்லலாம். இத்தகைய அறநெறி உள்ளம் படைத்த ஒருவரைக் கோடிக்கணக்கான கொடியவர்களும் விலங்குகளும் ஒன்றுகூடி முயன்றாலும் அவருக்குத் தீமை செய்ய முடியாது."

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு - 11

சிந்தனைக்கு - 11
******************

11. சமயம் என்பது புலன்களையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண முடியாது. கண்கள் மூலம் இதுவரை யாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக் காணவும் இயலாது. உணர்வின் மூலமும் இறைவனை உணரமுடியாது.

- விவேகாநந்தர்

Tuesday, February 17, 2009

சிந்தனைக்கு - 10

சிந்தனைக்கு - 10
********************

"மண்ணைக்கொண்டு மண்ணை எப்படிக் கழுவமுடியாதோ, அதேபோல வேற்றுமை உணர்வைக் கொண்டு ஒற்றுமையை உருவாக்க முடியாது."

- விவேகாநந்தர் (6-295)

Sunday, February 15, 2009

சிந்தனைக்கு - 8

சிந்தனைக்கு - 8
***********************

தன்னை வெல்லக் கற்றுக்கொண்டவனிடமே நாகரிகத்தின் முதிர்ச்சி இருப்பதாகச் சொல்லலாம்.

- விவேகாநந்தர்(4-196)

Saturday, February 14, 2009

சிந்தனைக்கு - 7

சிந்தனைக்கு - 7
****************

கையில் எதுவும் இல்லாது ஏழைகளாய் இருக்கும்போது, பிறர் கொடைக் குணத்துடன் இருப்பதை விரும்புகிறோம். பணமும் அதிகாரமும் நமக்கு வந்துவிடுமாயின் அக்கணமே நாம் குறுகிவிடுகிறோம். ஏழை பணக்காரன் ஆனதும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுகிறான்; சமய நிறுவனங்களிலும் இந்நிலையே நீடிக்கிறது.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு - 6

சிந்தனைக்கு - 6
***********************
எதையும் தவிர்க்காதே! எதையும் தேடிச் செல்லாதே!
இறைவனின் திருவுள்ளத்திற்கு இயைய நடந்துகொள்ளக் காத்திரு.

- விவேகாநந்தர்

Friday, February 13, 2009

சிந்தனைக்கு - 5

5. தமது கடவுடளிடத்தும் சமயத்தினடத்தும் அதிகப் பிடிப்புக்(வெறி) கொண்ட ஒருவன் பிற சமயத்தையோ கடவுளையோ காதால் கேட்டவுடனேயே வெறிகொண்டு ஊளையிடுவதற்கு, பக்குவம் அடையாத தாழ்ந்த பக்தியே காரணம்.

- விவேகாநந்தர்

Thursday, February 12, 2009

சிந்தனைக்கு - 4

சிந்தனைக்கு - 4
**********************

நல்ல காரியமாயினும், அதற்கென நிதி திரட்டுவது சந்நியாசியின் தருமம் ஆகாது என மனு கூறியுள்ளார். இக்கருத்து முற்றும் சரி என நானும் உணரத் தொடங்கியுள்ளேன். அதற்காக அவரின் கருத்துகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாகக் கொள்ளுவது தவறு.

- விவேகாநந்தர்

Wednesday, February 11, 2009

சிந்தனைக்கு - 3

யாரோ ஒரு தீர்க்கதரிசி அல்லது அவதார புருடர் சொன்னார் என்பதற்காக நாம் மதத்தைப் பின்பற்றுவதில்லை. கிருஷ்ணர் சொன்னார் என்பதற்காக நாம் வேதங்களை நம்புவதில்லை.வேதங்களின் காரணமாகத்தான் கிருஷ்ணனை நாம் நம்புகிறோம்.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு - 2

மூடக்கொள்கைகளை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ள வேண்டாம். புது உண்மைகளை ஏற்க ஆயத்தமாக இருங்கள்; பிறர் வெட்டிய கிணறு என்பதற்காக, அதில் ஊறியுள்ள தீஞ்சுவை நீரைப் பருகாமல் இருக்க வேண்டாம்; தன் முன்னோர்கள் தோண்டிய கிணறு என்பதற்காக, உவர் நீரைப் பருகி, முட்டாள் ஆகவேண்டாம்.

- விவேகாநந்தர்

Friday, January 16, 2009

சிந்தனைக்கு - 1

சிந்தனைக்கு - 1
***************

பரம்பரை பரம்பரையாக சமக்(ஸ்)கிருத மொழி மூலமே சமய போதனைகள் இந்தியாவில் கற்பிக்கப்பட்டன. அம்மொழிமூலம் சமயக் கல்வி கற்பிப்பதை புத்தர் புறக்கணித்து விட்டார். ஏனெனில், சமக்(ஸ்)கிருத மொழி மூலம் சமயக் கல்வி கற்பித்தால் அம்மொழியில் உள்ள மூடநம்பிக்கைகள் தம்மைப் பின்பற்றுவோருக்கு ஏற்படக்கூடும். ஆகவே அதற்கு வாய்ப்புத் தரலாகாது எனக் கருதினார்.

- விவேகாநந்தர்